புத்தகம் பற்றிய review எழுத வேண்டுமானால் எகிப்தில் சுமார் கி.மு. 2400 ஆம் ஆண்டு வரையாவது சென்று பார்க்க வேண்டும். தற்போதைய அச்சு முறை புத்தகப் பதிப்பு என்பது கி.பி. 1300 ஆம் ஆண்டின் மத்தியில் பிறந்தது. இப்படி இதையெல்லாம் எழுதின உங்களுக்கு புரியுதோ இல்லையோ எனக்கு எதுமே புரியாது. அதனால நாம வரலாற இதோட விட்டுருவோம்.
ப்ளாக் எழுதும் நானே ப்ளாகின் நாயகன் ஆன்னேன். சரி நீ இபோ எதுக்கு தசாவதாரம் வசனத்தை எல்லாம் இழுக்குறேனு கேட்கிறது புரியுது. Flow ல வந்து விட்டது. நான் முதன்முதலா புத்தகம் படிக்க ஆரம்பிச்சதுன அது சுஜாதா அவர்கள் எழுதின ஏன்? எதற்கு? எப்படி? புத்தகம் தான். அதனால அத பத்தியே first post பண்ணாலாம் அப்படினு நினைக்கிறேன்.
டேய்! சுஜாதாவோடப் புத்தகத்தைப் பத்தியெல்லாம் விமர்சனம் எழுத நீ என்ன அவ்வளோ பெரிய அப்பா டக்கரானு எல்லாம் கேட்காதீங்க. புக் ரிவ்வியூல நான் அந்த புக்ல என்ன படிச்சேன், புக் எங்க எல்லாம் கிடைக்கும், அதை எழுதியவர் பற்றியும், அவரின் பிறப் படைப்புகள் பற்றியும் மட்டுமே இருக்கும். புத்தகத்தை விமர்சிக்கும் எண்ணதோடு எழுதப் படவில்லை. எனக்கே தெரியும் மத்தவங்க எழுதின புத்தகத்தை (மட்டும்) விமர்சிக்கிற அளவுக்கு தகுதி கிடையதுனு. (எப்புடி எஸ்கேப் ஆனாம்ல)


This comment has been removed by a blog administrator.
ReplyDelete