நான் உன் மேல் கொண்ட
காதலைப் பற்றி எல்லாரிடமும்
கூறுகிறேன்...
உன்னை தவிர....
______________________________________________
எழுதப் பட்ட வார்த்தைகளும்
கிறுக்கப் பட்ட வரிகளும்
புழம்பப் பட்ட கவிதைகளும்
உனக்கானது என்பதை
எப்போது நீ அறிவாய்!
- மீ. ஜீவானந்தம்