Monday, November 5, 2012

ஏன்? எதற்கு? எப்படி?


எழுதாளரைப் பற்றி:
clip_image002சரி வெட்டி Introduction எல்லாம் போதும் விசயத்துக்கு வருவோம். சுஜாதாவின் லட்சக்கான ரசிகர்களுள் நானும் ஒருவன். இவரது இயற்பெயர் ரங்கராஜன். சுஜாதா தனது தனித்துவமான எழுத்து நடையால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள்,கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.இவரும் அப்துல் கலாம் அவர்களும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
1962இல் "இடது ஓரத்தில்" என்ற சிறுகதையை குமுதம் வாரஇதழில் சுஜாதா அவர்கள் எழுதினார் குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார். நாம் இப்போது வாக்களிக்கும் எந்திரம் உருவாக முக்கிய காரணமாக இவர் இருந்தார். சுஜாதா மே மாதம் 3 ஆம் நாள் 1935 இல் பிறந்தவர். பெப்ரவரி மதாம் 27 ஆம் நாள் , 2008 ஆம் ஆண்டு இயற்கை எய்தினர்.

மேலும் இவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள:
Author's we1Wikipedia-logo-en1logo_facebook


ஏன்? எதற்கு? எப்படி?
பதிப்பகம் : விகடன் பப்ளிகேஷன்

          ஏற்கனவே இது நான் முதன்முதலாக படிச்ச புத்தகம்னு சொல்லி இருந்தேன். இந்த புத்தகம் விகடன் இதழில் கேள்வி பதில் தொடராக வந்ததின் தொகுப்பு ஆகும். இரண்டு பாகங்களாக வருகிறது. இந்த புத்தகம் கிட்டத்தட்ட ஒரு கலைக் களஞ்சியம் போல நமக்கு எதாவது ஒரு கேள்வி தோனுச்சுனா இந்தப் புத்தகத்த புரட்டுங்க கண்டிப்பா பதில் கிடைக்கும்.

       மனிதர்களின் அடுத்த பரிணாம வளர்ச்சி, விலங்குகளுக்கு ரத்தவகை இருக்கா?, நாம குரங்குல இருந்து பரிணாமம் அடையாம இருந்து இருந்தா என்ன நடந்து இருக்கும்? ( இதை மையமாக வைத்து நன் ஒரு கதையே எழுதி இருக்கேன். பொறுங்க பொறுங்க அதையும் கூடிய சிக்கிரம் போஸ்ட் பண்ணி பயமுறுத்துறேன்), கடவுள் இருக்காரா? மொழிகள் பற்றி? வான் வெளி பற்றி? இப்படி இன்னும் நெறைய கேள்விகள் வியக்க வைக்கும் பதில்கள் படிக்க ரொம்பவே சுவாரசியமா குடுத்து இருக்காரு சுஜாதா. படிங்க பாஸ். நாம வெட்டியா பேசுறதுக்கு நெறையவே மேட்டர் இந்த புக்ல இருந்து கிடைக்கும் . நாமளும் பெரிய அறிவாளினு பந்தா பண்ணிக்கலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
clip_image010 clip_image012
600024     600024

No comments:

Post a Comment